பரிட்சைக்கு நேரமாச்சு

“அப்பா பார்த்தீங்களா, பரிட்சை வருதாம்!” என்றாள் மித்ரா பேப்பரை மடக்கிப் போட்டபடி
“ஆமாம், தேர்தலாம் தேர்தல், தூத்தேறி!” என்று சீறினார் ராமநாதன்
“ஓட்டுப் போடுகிறவர்களைத் தமிழ் நாட்டில்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்”
‘அதெல்லாம் சும்மா, நம்பாதே” என்றான் ரிஷி.
“இல்லை டியர், பேப்பரிலே போட்டிருக்கான்.”
“கொஞ்சம் லாஜிக்கலா யோசித்துப்பாரு. இன்னிக்குத் தேதியில இந்தியாவின் ஜனத்தொகை நூறு கோடி. இந்த நூறு கோடியிலே ஒர்த்தன். அவன் யாரு, எந்த ஊரு, என்ன பேரு, கறுப்பா, சிகப்பா, வடக்கா, தெற் கான்னு தலைவருக்குக் கூடத் தெரியாது. தெரிஞ்சா பாலிட்டிஷியன்ஸ், பத்திரிகைக்காரன் அத்தனை பேரும் அவனே மொச்சிட மாட்டாங்களா? அவனுக்கு ஏகப்பட்ட சலுகைகளே அரசாங்கம் அறிவிச்சுடாதா? பணம், பிரசாரம், அதிகாரம், அத்தனைக்கும் அப்பாற்பட்டு, நம்ம தேர்தல்கள் நடக்கணும். ஜனநாயகம் பிழைக்கணும்னுதானே இந்த ஏற்பாடு. இத்தனை ரகசியம். இந்த செலக் ஷன்ல மனுஷ வாசனையே கூடாதுன்னுதானே அதைக் கம்ப்யூட்டர் கைல விட்டிருக்கு அதுவும் எப்படியாப்பட்ட கம்ப்யூட்டர் இந்தியாவின் உயர்ந்த மூளைகள் சேர்ந்து உருவாக்கிய ‘நசி கேதன்”
“அது உங்களை செலக்ட் பண்ணினா நீங்க யாருக்கு ஒட்டுப் போடுவீங்க?” கேட்டாள் ப்ரீதம்.
‘இதெல்லாம் என்னம்மா தேர்தல், ஐ மீன் பரீட்சை, நானெல்லாம் நிஜமான தேர்தலில் நிஜமான வோட்டுப் போட்டவன்”
“நிஜமான ஒட்டா?”
“ஆமாம். அது அந்தக் காலம். ஜனங்கள் எல்லோரும் ஒட்டுச் சாவடிக்குப் போய் வரிசையில் நின்று, சிட்டு வாங்கி, முத்திரை குத்தி, பெட்டியில் போட்டு வருவோம்.”
“எல்லோருமா?”
“ஆமாம். ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் – அதாவது பரீட்சை. அதில் ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். அவர்கள் கூடித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.”
“எல்லோரும் ஒட்டுப் போட்டால் யார் ஜெயித்தவர் என்று எப்படித் தெரியும்?”
“எல்லாச் சீட்டையும் கொட்டி எண்ணுவார்கள். யாருக்கு அதிக சீட்டோ அவர்தான் ஜெயித்தவர்’
“சரி, யாருக்கு ஒட்டுப் போடணும்னு உங்களுக்கு எப்படித் தாத்தா தெரியும்?”
“அவனவனுக்குப் புத்தி இல்லே?”
“அந்த லட்சணத்தைத்தான் சரித்திரத்தில் குறிச்சி வைச்சிருக்காங்களே! எத்தனை நிலையில்லாத அரசாங்கங்கள்! அதனால் ஐந்து வருஷங்களுக்குள் எத்தனை தேர்தல்கள்! அதற்கு எவ்வளவு செலவு! செலவு மட்டுமா? எத்தனை நேரம் வெட்டியாய்ப் போயிற்று? பிரசாரத்தில், வோட்டுப் போடுகிற க்யூவில், அதை எண்ணுகிற இடத்தில், அதற்குப் பின் முடிவு சொல்கிற ஆபீசில்! காட்! ஹெள் மெனிமேன் அவர்ஸ்! அதையெல்லாம் உருப்படியாய்ப் பயன்படுத்தியிருந்தால் நாம் இன்னும் பத்து வருஷத்துக்கு முன்குடியே இந்த வல்லரசு ஸ்தானத்தை அடைந்திருப்போம்”
“இப்போது இருக்கிற சிஸ்டத்துக்கு அது ஒன்றும் குறைந்து போய்விடவில் லை”
“ஏன் இப்போது இருப்பதில் என்ன தப்பு?”
‘நூறு கோடி பேருக்கும் ஒர்த்தன் போய் ஒட்டுப் போடுகிறானாம், அதுவும் மிஷின் மூலம். பேஷ்!’
“அந்த ஒருவனை எத்தனை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் அதை நினைத்துப் பாருங்கள். இந்தத் தேசத்து பிரஜை அத்தனை பேர் ஜாதகமும் அதன் கையில் இருக்கிறது. எந்த ஊரில், எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள். எத்தனை சம்பளம், என்ன படிப்பு, எதில் ஈடுபாடு, எப்படி உடல்நிலை, மன ஆரோக்கியம் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. அதைக் கம்ப்யூட்டர் கையில் கொடுக்கிறார்கள். அது கவனமாய் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. ரெப்ரசென்டேட்டிவ் சாம்ப்ளிங், அவன் ஒட்டு சரியாகத் இருக்கும். இத்தனை நாள் இருந்து வந்திருக்கிறது” அத்தனை சாமர்த்தியமான மிஷின் நேர ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடலாமே? எதற்காக ஒரு பிரஜையைத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?”
“செய்துவிடலாம். வெகு சுலபம். ஆனால் நம் கொள்கை? நாம் ஜனநாயகத்தைத் தீவிரமாக நம்புகிறவர்கள். இந்தத் தேசத்துக்குக் கடுமையான சோதனைகள் ஏற்பட்ட காலத்தில்கூட நாம் ஜனநாயகத்தைக் கைவிட்டு விடவில்லை, குடிமக்களுடைய கருத்திற்கு, உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காமல், முழுக்க முழுக்க மிஷின் மூலம் ஒரு தேர்தல் எப்படி ஜனநாயகத்தில் சாத்தியம்?”

பரீட்சைக்கமிஷனர் வந்திருக்கிறேன்.”

குழைவான குரல் கேட்டு நிமிர்ந்தார் தலைவர். எதிரே பணிவாய் நின்றுகொண் டிருந்த மனிதரைப் பார்த்தார். முகம் இறுகிற்று.

எந்தக் காரணம் கொண்டும் என்னை அலுவலகத்தில் சந்திக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேனே?”

“என்னிடம் யாரும் அப்படிச் சொல்ல வில்லை, தலைவர் அவசரமாகப் பார்க்க விரும்புவதாக மட்டும் செய்தி வந்தது.”
“இதை யெல்லாம் விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பார்களா? தேர்தல் – சட்! -பரீட்சை வரப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் என்னேந் தனியாகச்சந்திப்பது தெரிந்தால் எதிர்க் கட்சிகள் கதை கட்டிவிடாதா? “சுத்தமான ஜனநாயகவாதி’ என்ற என் இமேஜ் என்ன ஆகும்?”‘இத்தனை சிறிய விஷயத்தில் கூட புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள முடி யாத நீங்கள். இத்தனை முக்கியமான பரீட் சையை எப்படி நடத்தப் போகிறீர்கள்?”
“தலைவர் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். எல்லாம் கவனமாக ஏற்பாடு செய்திருக் கிறேன்.”
“எங்கே?”
“தமிழ் நாட்டில். அங்கு தலைவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் நிலவுவது போன மாதக் கணக்கெடுப்பின் மூலம் தெரிகிறது”

“தமிழ்நாடு? குட்! தலைநகருக்கு வெகு தொலைவில். பிரச்னைகள் குறைந்த மாநிலம். வீடு, உணவு, கல்வி, மின்சாரம், போக்கு வரத்து வசதிகள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது பரவாயில்&ல. விலவாசி தான் பிரச்னை, சமாளித்து விடலாம்.

“எதற்கும் பரீட்சையின்போது விலைவாசி குறித்த கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.”

“யார்?”
“படித்தவர். நடுத்தர வர்க்கம். நகரத்து இளைஞர்.”
“படித்தவரா?”
“இந்த முறை அது அவசியமாகிறது. போனதரம் ஹரியானாவின் விவசாயி. அதற்கு முன்னுல் பீகாரின் ஆதிவாசி. அப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தால் படித்தவர்களுக்கு இந்த சிஸ்டத்தில் நம் பிக்கை போய்விடும்.” “அதுவும் சரிதான். ஆனால் ஜாக்கிரதை யாக இருங்கள்.”
“கவலைப்பட ஒன்றுமில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொண்டு விட்டேன். இன்று படித்தவர்களுக்கு என்று சொந்தக் கருத்துக்கள் இல்லை. அவர்களின் அபிப்பிராயங்களே மாஸ் மீடியாக்கள் உரு வாக்குகின்றன. இது தமிழ் நாட்டில் மிக அதிகம். இந்தியாவில் மிக அதிகம் விற்பனை யாகும் தினசரி, வாரப் பத்திரிகை எல்லாம் தமிழில் இருக்கின்றன. அவை தலைவரை ஆதரிக்கின்றன. இந்த இளைஞர் உங்கள் மீது அபிமானம் கொண்டவர்.”
“எதற்கும் ‘நசிகேதன்” கேட்க வேண்டிய கேள்விகள் தயாரானதும் என்னிடம் காண் பித்து விடுங்கள். நான் இன்னும் ஐந்து வருடமாவது தேசத்துக்குப் பணி புரிய விரும் புகிறேன்”
” “உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்.”
“ஆனால் என்ன அலுவலகத்தில் சந்திக்க வேண்டாம்.”பரீட்சைக்கு இரண்டு நாள் இருக்கும். வாயில் மணி கூப்பிட்டது. ரிஷிபோய்க் கதவைத் திறந்தான். கோதுமைப் பொன் நிறம், குறிப்பிடும்படியான உயரம் முகத்த்தில் சின்ன முறுவல்.

அது எந்த நேரமும் உறுமலாக மாறலாம் என்பது போலத் தோற்றம்.
“இது அஸ்ட்ரா காலனி?”
“யெஸ்”
“503வது கட்டிடம் : 27வது ப்ளாட்?”
“ஆமாம். யார் வேண்டும் உங்களூக்கு?”
“மிஸ்டர் ரிஷி”
“நான்தான்.”
“வாழ்த்துக்கள்.” வந்தவர் கை பிடித்துக் குலுக்கிஞர்.
“நான் கெளடல்யா. பரீட்சைக் கமிஷன் அதிகாரி. நூறு கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக, இந்தியாவின் ஏழாவது பொதுப் பரீட்சையில் தலைவரைத் தேர்ந் தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்
திருக்கிறது.”
“காட்! எனக்கா”
ரிஷி திகைத்துப்போனான் “வாவ்” என்று கூறினுள் மித்ரா,
“உட்காருங்கள்.”
“மித்ரா, எனக்குத் தண்ணி கொண்டு வா. மார்பு படபடவென்று அடைக்கிறது.”
“ரிலாக்ஸ் மிஸ்டர் ரிஷி.” என்று அவனைசோபாவில் அமர்த்தினார் அதிகாரி.
சட் டைப் பித்தான்களைத் தளர்த்தினார். மித்ரா, இரண்டு பேருக்கும்.ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்தாள். இவன் காதருகே குனிந்து, “மயக்கம் கியக்கம் போட்டுடாநீங்க, உடல் நிலை சரியில்லாத ஆள்னு வேற யாரை யாவது செலக்ட் பண்ணிடப் போருங்க” என்று பல்லைக் கடித்தாள்.
“மிஸ்டர் ரிஷி, நீங்க கொஞ்சம் எங்க கூட ஒத்துழைக்க்னும், இரண்டு நாளைக்குஎங்கேயும் வெளியே போகக் கூடாது!”.
“மேடம், நீங்க போன் பண்ணி பீசுக்கு நியூஸ் சொல்லிடுங்க. நியூஸ் பேப்பர், பத்திரிகை யெல்லாம் இரண்டு நாளேக்குப் போட வேண்டாம்னு சொல்லி யிருக்கேன். இப்போ டெலிவிஷனை சீல் பண்ணிடப் போறேன். டெலிபோனைக் கட் பண்ணிடுவாங்க. மேடம், நீங்க கூட வெளியே போக அவசியக் காரணம் என்றால் மட்டும் போங்க. அவ சியம் இருந்தால் மட்டும் பேசுங்க, நீங்க வெளியே போகும்போது உங்களை எங்க ஆளுங்க பின்தொடர்வாங்க. பயப்பட வேண்டாம். சின்ன (Bug) கொடுக்கிறோம் உங்க. கம்மல்லயோ, மோதிரத்திலேயோ வைச்சுக்குங்க. இந்த இரண்டு நாளும் நான் உங்க வீட்டிலேயே தங்கப் போறேன். எனக்காகும் செலவைப்
பத்திக் கவலைப்படாசிங்க, அரசாங்கம் கொடுத்திடும். அப்புறம் உங்க குழந்தை எங்கே 7″”
“தூங்கறா.”
”எழுந்து என்னை யாருன்னு கேட்டா, மாமா, பெரியப்பா இப்படி ஏதாவது சொல்லிச் சமாளிங்க.”
“சார், இந்தக் கெடுபிடி யெல்லாம் அவ சியம்தானா?”
“கெடுபிடி இல்லை மிஸ்டர் ரிஷி, ஒரு முன்னெச்சரிக்கை, உங்களுடையது எத்தனை பெரிய பொறுப்பு!”
“எனக்கு அந்தப்பொறுப்பு வேண்டாம்! ”
“அது உங்கள் விருப்பம் இல்ல ரிஷி. ஒரு ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடி மகனுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு. ‘உங்களைப் போன்ற படித்தவ்ர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்&ல.”
‘நசிகேதன் தப்பே பண்ணுதா?”
பொறுமை இழந்த மித்ரா நடுவில் குறுக்கிட்டாள். ‘அவர் சொல்றதைக் காதில் போட்டுக் காநீங்க சார். அவர் நர்வஸ் ஆகியிருக்கிறார். மற்றபடி விவரம் தெரிந்தவர்தான் புஸ்தகம் எல்லாம் படிக்கிறவர்தான்.” ‘
“தெரியும் மேடம்’ அதிகாரி புன்னகைத் தார்.
“எனக்கென்னவோ பயமா இருக்கு மித்ரா.”
“என்ன பயம்?”
” “ஏதாவது தவறு நேர்ந்து விட்டால்? என் தேர்வு மூலம் யாரையாவது பொறுபபில்லாத தலைவர் பரீட்சையில் ஜெயித்து விட்டால்? தேசமே குட்டிச்சுவராகப் போகாதா? அப்போது எல்லோரும் இவனால்
தான் என்று திட்ட மாட்டார்களா?
” “நாளைக்குத் தேசம் முழுக்க நீங்கள் பேசப்படுவீர்கள். படம் ப்ேப்பரில் வரும். பத்திரிகைக்காரர்கள் பேட்டி எடுப்பான் வீடியோ படம் தயாரிக்கப்படும். உங்களைக் கூட்டங்களில் பேசக் கூப்பிடுவார்கன், ஒரு ராத்ரியில் திடீர் புகழ்.”
“அதற்கு என்ன?”
“அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிடுங்கள். இந்தப் புகழை நீங்கள் ஏதாவது காசு பண்ண முடியுமா”? ஆபீஸில் புரோமோஷன் கிடைக்குமா? கவர்ன்மெண்டில் நமக்கு ஒரு ஃப்ளாட் இல வசமாகத் தருவார்களா? இவற்றையெல் லாம் எப்படிச் சாதிக்கலாம் என்று யோசியுங்கள். இதையெல்லாம் இந்த இரண்டு வருஷத்துக்குள் செய்து கொண்டால் உண்டு. அப்புறம் அடுத்த பரிட்சை வந்து விடும்”
“யோசிப்பதற்கு இதை விடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன மித்ரா”
“‘என்ன??’ ” “”மனசாட்சி!, ”
” “எக்கேடும் கெட்டுப் போங்கள். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். நமக்கு பெண் குழந்தை இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்!”

“எழுந்திருங்க.பரீட்சைக்கு நேரமாச்சு மித்ரா உலுக்கினுள். பரீட்சைக் கமிஷன் அதிகாரி-காலை வணக்கம் சொன்னான் கார் கதவைத் திறந்து விட்டார்கள். கார் விரைந்தது. எதிரே பொட்டு டிராபிக் இல்லை.
“என்ன ஆச்சு?”
“என்ன?”
ரிஷி வெறிச்சிட்ட தெருவைச் சுட்டிக் காண்பித்தான்.
“இதுவா? இது முன் நீர்மானிக்கப்பட்ட பாதை உங்கள் பத்திரம் கருதி வேறு டிராபிக் அனுமதிக்கப்படவில்லை.”
“பாதசாரிகள் கூட?”
“ஆமாம். தவிரவும் இது புல்லட் புரூப் கார். உங்கள் மீது ஒரு குண்டுவி பட முடியாது.”
கார் நின்ற இடத்தில் இரண்டு வெள்ளை உடுப்புக்காரர்கள் வரவேற்றர்கள். ஒரு ஏர்கண்டிஷன் மண்டபத்துக்குள் கூட்டிப் போஞர்கள். ஆஸ்பத்திரி மாதிரி இருந்தது. “எங்களுடைய நல்வாழ்த்துக்கள்” என்று சிரித்துக் கொண்டே உடலில் சில் எலக்ட்ரோட்களைப் பொருத்திஞர்கள்.
“என்னது இது?” “பொய் சொன்னால் கண்டு பிடிக்க லை டிடக்டர்.”
* “காட்!”.**
“பதற்றப்பட வேண்டாம். இதோ உங் களுக்கு எதிரில் தெரியும் திரையில் நசி கேதனின் கேள்விகள் எழுத்து வடிவில் தோன் றும். ஒலி வடிவமாகவும் உங்களுக்குக் கேட்கும் ”
“ஓகோ!
“ஆனால் பயப்பட வேண்டாம். கேள்விகள் சுலபமாக இருக்கும். உதாரணமாக “உங்கள் தெருவில் ஒழுங்காகக் குப்பை வாருகிறார்களா'”
“அப்படியா?”
‘பரீட்சைக்கு நேரமாச்சு. ஆரம்பிக்கலாமா?”
“ஓ! அதற்கு முன்ஞல் எனக்கு ஒரு தம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்குமா?”
“தாரளமாக”
பச்சை வண்ணத்தில் முதல் கேள்வி திரை யில் தோன்றியது. “இந்தியாவின் பெருமை (அ) அதன் மக்கள்? (ஆ) தலைவர்? (இ) ஜனநாயகம்?
ரிஷி திரையை ஒரு தரம் கூர்ந்து பார்த் தான். பின் விருட்டென்று கையில் இருந்த தம்ளரை அதன் மீது வீசி எறிந்தான். ணிங்” என்ற சங்கீதத்துடன் கண்ணுடிகள் சிதறின. பரீட்சை நின்றது.
பரபரவென்று கதவு திறந்தது.
“‘என்ன?’
” இந்தியாவின் பெருமை-மனச்சாட்சி.”
“ஸாரி. அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’ என்றார் டாக்டர்.

(கல்கி)

கற்பனைக்கு உந்துதல்: அசிமோவ்

 

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these