மழைக்கு ஒரு கவிதை சொல்லு
வேண்டினள் சகி,
வானின்று உதிரும் வைர ஊசிகள் கண்டு.
மழையே ஓர் கவிதை
மழைக்கேன் கவிதை?
மறுத்தான் கவி
இயற்கையை எழுதாதவன்
கவியே இல்லை
சீண்டினாள் சகி
இயற்கையாய் எழுதாதவன்
கவியே இல்லை
என்றான் கவி
• 28 ஆகஸ்டு 2014
மழைக்கு ஒரு கவிதை சொல்லு
வேண்டினள் சகி,
வானின்று உதிரும் வைர ஊசிகள் கண்டு.
மழையே ஓர் கவிதை
மழைக்கேன் கவிதை?
மறுத்தான் கவி
இயற்கையை எழுதாதவன்
கவியே இல்லை
சீண்டினாள் சகி
இயற்கையாய் எழுதாதவன்
கவியே இல்லை
என்றான் கவி
• 28 ஆகஸ்டு 2014