Latest Posts

THE VANISHED

Someone—memory’s fog won’t tell us who—once called us ‘the three strings of a violin’ . A strange image, maybe, but it fit. We were tuned to the same ache, pulled taut by the same world, vibrating whenever life plucked at us. The coarsest string, the one that scraped hardest when bowed, was Aruna. You’d never guess it looking at her.

Read More »

அழியாத அன்பு

ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் – அந்தக்கரவொலிகளைக் கண்ட இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். ஏன்?முதுகுத் தண்டு சிலிர்த்தது.விடிகாலைப் பனியில் கிணற்றடி ஈரத்தில் கால் வைத்த மாதிரி,கடைவாயில் பாலொழுக புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பைக் கண்டகணம்போல, விடைபெற்றுப் போகிற தருணத்தில் சற்றும் எதிர்பாராமல்கன்னத்தில் பதிந்த காதலியின் முத்தம் போல, சிலிர்ப்பில் நனைந்து மனம்இளகியது.எல்லாம் அந்த சிம்பொனி செய்த வேலை. உள்ளம் சிலிர்த்து விம்மசிம்பொனி முடிந்த நொடி கூட்டம் எழுந்து நின்றது. அரங்கம் அதிர கரவொலிஎழுப்பியது. அதை ஏற்றுக்கொள்ள இசையமைப்பாளர்,

Read More »

நிவேதிதையா காரணம்?

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் பொய்யாகவோ மிகையாகவோ ஒன்றை எழுதுவதும், படிப்பதுவும், பரப்புவதுவும் அதை நம்புவதும் நம் கலாசாரத்தின் ஓர் அம்சமாகவே ஆகி விட்டது . “பாரத சுதந்திரம் ,அடிமைத்தனத்தை  நீக்குதல்,பெண்மையை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல், ஜாதி வேறுபாடுகளைத் தகர்த்தல், தீண்டாமை நோயைக் களைதல், ஒற்றுமையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை வேரறுத்தல், தேசபக்தியை தெய்வபக்திக்கு ஒப்பாக்குதல், அச்சம் தவிர்த்தல் முதலிய சக்தி மிகு சிந்தனைகளை நிவேதியையிடமிருந்து பாரதியார் பெற்றார். பாரதியார்

Read More »

தகப்பனைப் போல ஒரு முன்னோடி

மாலன் காற்று வேகமாக வீசும்போது கதவுகள் படீரெனெ திறந்து கொள்வதைப் போல பத்திரிகைப் பணி பாரதியின் மனக் கதவுகளைத் திறந்தது. அவரது பார்வை விரிந்தது. அவர் பத்திரிகைத் தொழிலுக்கு வந்திருக்கவில்லையென்றால் அதிக பட்சமாக அவரது காலத்தில் வாழ்ந்திருந்த பல சிறந்த தமிழறிஞர்களைப் போல ஓரு தமிழ் அறிஞராக சிறப்பெய்தியிருக்கக் கூடும்.  அவரது காலத்தில் உ.வே.சாமிநாதய்யர், இரண்டு ராகவய்யங்கார்கள், ம.கோபாலகிருஷ்ணன், நாவலர் சோமசுந்தர பாரதி, அரசஞ்சண்முகனார் எனப் பல தமிழறிஞர்கள் வாழ்ந்தார்கள்  அவர்கள் எல்லோரும் செவ்வியல் தமிழுக்கும், இலக்கணத்திற்கும் பங்களித்தார்கள். பத்திரிகைத் தொழிலுக்கு வரும் முன் 

Read More »

ஆழமும் தெளிவும் அமைந்த நதி

பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான, ஆனால் பாரமர்களால் குறைவாக வாசிக்கப்பட்ட, வாசித்தவர்களாலும் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட நூல் பகவத் கீதை. அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகக் கேள்விப்பட்டதைக் கொண்டு பேசுகிறவர்கள் அதனை, விவிலியம், குரான், குருகிரந்த சாகிப் போன்ற நூல்களைப் போலக் கருதி அது இந்து மதத்திற்கானது என்பார்கள். வேறு சிலர் ‘கீதை போர் புரியத் தூண்டும் நூல்’ என்பார்கள். சிலர் இதை ஒழுக்கத்திற்கான வழிகாட்டி என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் நூல் என்பதுதான்.ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட பரிணாமங்கள் அதற்கு உண்டு.

Read More »

பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர்

நாம் நம் வாழ்நாளில் ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத ஒருவர் நம் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பாரதியின் வாழ்க்கை. பாரதியும் விவேகானந்தரும் வாழ்வில் ஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. விவேகானந்தர் பாரதிக்கு 19 ஆண்டுகள் மூத்தவர். விவேகானந்தர் மறைந்த போது (1903 ஜூலை) பாரதி காசியில் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த சமயத்தில்தான் எட்டையபுரத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய 1893 செப்டம்பரில் பாரதிக்கு வயது 11. அப்போது அவர் எட்டையபுரத்தில்தான் இருந்தார்.

Read More »

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.