Maalan மாலன்

m_writing

 Maalan V. Narayanan

 Maalan V. Narayanan is a writer by choice and a journalist by profession .Born in India in 1950, he graduated from Madurai University and later pursued his higher studies in journalism at  University of Florida, Gainesville, US. He has 17 titles to his credit, some of which have won awards and many of them are being discussed in university class rooms of contemporary writing. He was guest of honor in some literary festivals such as Writers’ Week celebrations of Singapore.

His poems have found a place in the anthology of protest poetry, Voices of Emergency, compiled by Prof. John Oliver Perry of Tufts University, USA and in the Anthology of Tamil poetry by Sahitya Academy of India.

Some of his stories in translation in English and in other Indian languages and have appeared in the leading English and Indian Language magazines and the Anthology of Modern Tamil Stories published by Writers’ Workshop, Calcutta. Some his stories are translated into Chinese and Malay too. India’s national television channel Doordarshan has produced a documentary on him

He has served of leading Tamil magazines and newspapers and is a pioneer in Tamil television journalism

மாலன்

எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும் கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன மாலன்,  இன்று புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர். முன்னர் இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1970-80ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார்.இவரது கவிதைகள் சாகித்திய அகதாமி தொகுத்து வெளியிட்ட தொகுப்பிலும், எமெர்ஜென்சியை விமர்சித்து எழுதிய கவிதை, அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த கவிதைத் தொகுப்பிலும், கதைகள் கல்கத்தாவில் உள்ள writers workshop தொகுதியிலும் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதை தப்புக் கணக்கு திரு. பாலு மகேந்திராவால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது

சாகித்திய அகதாமியால் அதன்  தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்காக தி.ஜானகிராமன், சிட்டி போன்ற முன் தலைமுறைப் படைப்பாளிகளாலும், பிரபஞ்சன், பொன்னீலன்,பா.செயப்பிரகாசம் போன்ற சமகாலப் படைப்பாளிகளாலும், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.வெங்கடேஷ் போன்ற அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாலும் பல்வேறு விமர்சகர்களாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவர்.  நெல்லை தூய சேவியர் கல்லூரி இவரது படைப்புகள் குறித்து ஆராய 2006ம் ஆண்டு ஒரு முழுநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

1981ல் முழுக்க முழுக்க இளைஞர்களின் படைப்புக்களை மட்டும் தாங்கித் தமிழின் முதல் இளைஞர் இதழாக மலர்ந்த ‘திசைகள்’ இதழின் ஆசிரியராக  பொறுப்பேற்றவர் மாலன். தமிழின் முதல் முழுநேர செய்தித் தொலைக்காட்சியான சன்நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். யூனிகோட் குறியீட்டில் அமைந்த முதல் இணைய இதழான ‘திசைகள்’ இதழின் ஆசிரியர்.
தன்னுடைய இதழியல் பணிகள் அனைத்தும் தமிழ் இதழியலின் எல்லைகளை விரிவாக்குவனவாகவே அமைந்தன என்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறும் மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்.

பிரதமர்கள்  நரசிம்மராவ், வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொணடவர்.

சென்னைப் பல்கலைக்கழத்தின் முதுகலை (தமிழ் இலக்கியம்) பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் டாக்டர். சென்னாரெட்டியாலும், பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவாலும் நியமிக்கப்பட்டவர்.

Commonwealth Journalist Association, South Asian Literary Association ஆகியவற்றின் உறுப்பினர்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these