இதழியலும் வகுப்பறையும்

with singapore teachersசிங்கப்பூர் தமிழாசிரியர்கள் முகாமில் ஆற்றிய உரை 13.11.2013

ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக தமிழர்களது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திவரும் அமைப்புகள் கல்விக்கூடங்களும் தமிழ் இதழ்களும். இந்த இருநூறு ஆண்டுகளில் 150 ஆண்டுகளாவது கல்வியும் இதழியலும் பெரிதும் தமிழ் சார்ந்தே இயங்கின என்பதை வரலாறு உறுதியாய் உரைத்துக் கொண்டிருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கூட ஆரம்பக் கல்வி என்பது மொழிக் கல்வியாகவே இருந்தது.மொழியைக் கற்பது, மொழியில் கற்பது என்ற இரண்டும் இடைவெளியின்றி ஒன்றாகவே இருந்தன. கணிதம் கூடத் தமிழ் எண்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டன.

கிராமப்பள்ளிக்கூடங்களில்தமிழ்எண்களேவழக்கத்தில்இருந்தன. நான்இளமையில்அவற்றையேகற்றுக்கொண்டேன். நாராயணையர்அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான் கற்பிப்பார்” என்று உவேசா தனது ஆரம்பக் கல்வி பற்றி அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார்.

இன்று நிலைமை நேரெதிராக மாறிவிட்டது.பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் மொழி வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் ஆங்கிலத்தில் நடக்கின்றன. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ் வழி பயில்வோரின் எண்ணிக்கை குன்றி வருகிறது. (ஆங்கில வழிக் கல்விகாரணமாக கடந்த ஆண்டு, முதல் வகுப்பில், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 947 மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டில்(2013-14) , 4 லட்சத்து, 14 ஆயிரத்து, 567 பேர் சேர்ந்துள்ளனர். 93,000 மாணவர் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் அதிகமாகியுள்ளதாக கல்வி துறை தெரிவிக்கிறது. ஆங்கில வழிக்கல்வி மோகத்தில், பெரும்பாலான பள்ளிகளில் இருந்த மொத்த தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவாக சுருங்கிஉள்ளது தினமலர் ஜூலை 28 2013)

இன்று தமிழ்க் கல்வி என்பது மொழிக் கல்வி மட்டுமே. தமிழில் கற்பது அல்ல என்ற நிலை உருவாகிவிட்டது. தமிழைப் பாடமொழியாக மாத்திரம் பயில்வது தமிழ் மொழியைக் கற்பிப்பிப்பதில் சில பிரச்சினைகளை உருவாக்குகிறது

1.      வகுப்பறையில் தமிழைப் பயிலும் நேரம் குறைகிறது

2        தமிழில் வாசிப்பதும் எழுதுவதும் குறைகிறது. போதிய வார்த்தை வளம், இலக்கண அறிவு, தமிழில் தன்னை வெளிப்படுத்திக் ஆற்றல் இன்மையால் பிழைகள் மலிகின்றன

3        தமிழ் மொழி மூலம் சமகால உலக நடப்புகளை அறியும் வாய்ப்புக்கள் குறைவதால் தமிழ் மொழியை ஓர் ’பழம் பொருளாக’க் காணும் மனநிலை தோன்றுகிறது. நவீன உலகில் தனது கருத்தை வெளிப்படுத்த தமிழ் போதுமானதாக இராது என்ற எண்ணம் எழுகிறது

4        இலக்கியத்தின் மூலமே மொழியைக் கற்பிப்பது தமிழ் கற்றலைக் கடினமானதாகக் கருத வைக்கிறது

மொழியைக் கற்பதற்கான அடிப்படைக் காரணம் ஆர்வம் என்கிறார் நோம் சாம்ஸ்கி (I think 90% of it is motivation- Noam Chomsky interview in Radical Pedagogy, March 26, 2013)  எந்த ஒரு கற்றலின் அடிப்படையுமே கற்பனை, தகவல்களைச் சேகரித்துக் கொள்வதைவிட கற்பனை முக்கியம் என்கிறார் ஐன்ஸ்டீன் (“Imagination is more important than knowledge”)

இன்றைய கல்விமுறை இந்த இரண்டையும் களவாடிவிட்டது. கற்பித்தலின் அணுகுமுறை கண்டுள்ள மாற்றம் கற்பித்தலை கடினமாக்குகிறது.

1.தேர்வுகளுக்காக பயிற்றுவித்தல்

2.தரப்படுத்துதலுக்கான தேர்வுகள்

3.பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் ஆசிரியர்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தங்கள்

இந்தப் பொதுவான மாற்றங்களுக்கு அப்பால் தமிழ்க் கல்வி தனித்துவமான சில சவால்களையும் எதிர் கொள்கிறது. தமிழ் கல்வி என்பது நெடுங்காலமாக தமிழ் இலக்கியம்,  இலக்கணம் இவற்றைக் கற்பிப்பதாகவே இருந்து வருகிறது . ஆனால் இலக்கியக் கல்வி மட்டுமே தமிழ்க் கல்வியாக இருப்பது இன்றையத் தேவைகளை நிறைவு செய்யாது. ஒரு காலத்தில் தமிழ் மொழியைக் கற்பது கற்பிப்பது இவற்றின் நோக்கம் தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்வது, மொழியின் மரபைத் தெரிந்துகொள்வது, இலக்கிய நயம் பாராட்டுவது, இலக்கியம் புனைய ஊக்கம் பெறுவது என்பதாக இருந்தது. இதற்கு இலக்கியம், மிகச்சரியானதோர் சாதனமாக இருந்தது. உலகமயமாகிவிட்ட இன்றைய சூழலில் தனித்துவமான பண்பாடு என்பது எந்த சமூகத்திலும் இல்லை. இலக்கியம் புனைவதும், வாசிப்பதும் அவற்றிற்குரிய முதன்மை நிலையை இழந்துவிட்டன  

21ம் நூற்றாண்டுக் கல்வி

கல்வியின் இலக்கு என்று 17ம் நூற்றாண்டில் லண்டன் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த சர் வில்லியம் கர்டிஸ் முன்மொழிந்த மூன்று R களே இன்றளவும் கல்வியின் அடிப்படைகளாக இருந்து வருகின்றன.

Reading: வாசித்தல்

Writing; எழுதுதல்

aRithmetic: கணக்கு

 

இந்த மூன்று ’ஆர்’ தத்துவம் தமிழர்கள் அறியாது அல்ல. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்என ஓளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்குஎனத் திருவள்ளுவரும் நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பணியிலும், வாழ்விலும் சிறக்க வேண்டுமானல் மாணவர்கள் இந்த மூன்று ‘ஆர்’களோடு வேறு மூன்று திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அவை நான்கு “C” க்கள் என்றழைக்கப்படுகின்றன.

creativity,  படைப்பாற்றல்

Critical Thinking  ஆய்வு நோக்குடைய சிந்தனையாற்றல்

communication  கருத்துப் பரிமாற்றத் திறன்

collaboration இணைந்து பணியாற்றும் ஆற்றல்

படைப்பாற்றல் என்பது மாணவர்களிடம் உள்ள படைப்புத் திறனைப் பயன்படுத்தி பாடத்திட்டத்தில் உள்ளவற்றை அவர்களே அறிந்து கொள்ளச் செய்வது.

ஆய்வு நோக்குடைய சிந்தனையாற்றல் என்பது ஒரு பொருளை, கருத்தைத் தரவுகளின் அடிப்படையில் ஒப்பு நோக்கி முடிவுகளை எட்டும் திறன். அதாவது தெளிவுறவே அறிதல்.

கருத்துப் பரிமாற்றத் திறன்: தெளிவுதர மொழிதல்:

இணைந்து பணியாற்றும் ஆற்றல்: கூடித் தொழில் செய்

 

சற்று உற்று நோக்கினால், இந்த நான்கு Cக்களும் சங்கமிக்கும் இடம் ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இயலும்

 

தமிழ் பயிற்றுவிப்பதில் அச்சிதழ்கள்

 

அவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்?

1.பாடப்புத்தகங்கள் உடனுக்குடன்இற்றைப்படுத்தப்படுவதில்லை. நாளிதழ்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக உருவாகின்றன

2.பாடப் புத்தகங்களின் நடை (ஆசிரியர் நோக்கில்) செம்மையானதாக, (மாணவர் நோக்கில்) கடினமானதாக இருக்க வாய்ப்புண்டு. பத்திரிகை நடை எளிமையானது, பொதுவானது, பயனர் நோக்கில் அமைந்தது

3.சமகாலத்தியது. நவீனமானது. எனவே உணர்வு ரீதியாக ஒன்றுவது எளிதானது

4.மாணவர்கள்/ஆசிரியர்களின் படைப்பாற்றல், ஆய்வு நோக்குடைய சிந்தனையாற்றலை விரிவுபடுத்த ஏராளமான தகவல்களைத் தருவன அச்சிதழ்கள்

 

எப்படிப் பயன்படுத்தலாம்?

1.உச்சரிப்புப் பயிற்சி

இதழ்களை உரக்கப்படிக்க ஊக்கப்படுத்துவதன் மூலம் உச்சரிப்புப் பிழைகளை, குறிப்பாக ன, ண, ல, ள, ழ, போன்றவற்றை சரி செய்ய இயலும்

2.எழுத்தறிதல்

அச்சிதழ்களில் செய்தித் தலைப்புக்களில் உள்ள பெரிய எழுத்துருக்களைக் கொண்டு குழந்தைகளுக்கும், அயல் மொழியினருக்கும் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த இயலும்/

3..வார்த்தை வளத்தை வளர்த்தெடுத்தல் (Building Vocabulary)

ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் அல்லது குறிப்பிட்ட ஒலியில் முடியும் சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டுமாறு செய்தல்

4.இலக்கணப் பயிற்சிகள்

  அ. வினைச் சொல், பெயர்ச் சொல் எவையென அறிதல்

  ஆ. வேற்றுமை உருபுகள் அறிதல்

  இ. அயல மொழிச் சொற்களை அறிதல்

  ஈ.  கலைச் சொற்களை அறிதல்

    ஒருமை பன்மைக்கான ஈற்றசையை அறிதல்

  எ.  உயர்திணை அஃறிணைக்கான விகுதிகளை அறிதல்

5.வாக்கிய அமைப்புகளை அறிதல்

6. ஒரு செய்தியை கோர்வையாக எடுத்துச் சொல்ல அறிதல்

7. வினா எழுப்பும் மனநிலையைக் கட்டமைத்தல்

8.தரவுகளைத் தேடப் பயிற்றுவித்தல்

9. சமூக நிலை பற்றிய அறிவை ஊட்டுதல்

10. இந்தப் பயிற்சிகள் பலவற்றையும் குழுக்கள் அமைத்து செய்வதற்கான வாய்ப்பு (வெவ்வேறு இதழ்கள், வெவ்வேறு பக்கங்கள், வெவ்வேறு நாள்கள்)

 

தடைக்கற்கள்:

 

தமிழ்நாட்டிலிருந்து வெளியிடப்படும் இதழ்களில் பிறமொழிக் கலப்பு நிறையவே உள்ளது. கொச்சையான வழக்குகளும் இடம் பெறுகின்றன. இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன. சிங்கப்பூர் நாளிதழ் தமிழ் முரசில் அந்த அளவு பிழைகள் இல்லை.

 

தீர்வுகள்

1.மாணவர்களுக்காக, மாணவர்களைக் கொண்டே இணைய இதழ்கள் துவங்குதல்.

மாணவர்களைக் கொண்டே அல்லது மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஓர் இணைய இதழைத் துவக்குவது இதற்கு சிறந்ததோர் தீர்வு. இது 21ம் நூற்றாண்டின் தேவைகளான நான்கு ’சி’ களையும் நிறைவு செய்யும்.

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று ஓர் இணைய தளத்தைத் துவக்குதலும் இயக்குதலும் எளிது. இன்று இதற்கு தொழில்நுட்ப அறிவு ஏதும் தேவையில்லை. சிறிதளவு கணினிப் பயிற்சியும் ஒரு படிவத்தை நிரப்புவதற்குத் தேவையான ஆங்கில அறிவும் இருந்தாலே போதும்

இன்று அவற்றை இலவசமாகவே துவக்க முடியும் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

 

இணைய தளத்தை இலவசமாகத் துவக்க உதவும் அமைப்புக்கள்

·  WordPress : http://ta-lk.wordpress.org/ (இந்தத் தளத்தை தமிழிலேயே படிக்கலாம்)

·  Google Sites ; https://sites.google.com/

·  Angelfire : http://www.angelfire.lycos.com/

·  Webs : http://www.webs.com/

·  Webnode: http://www.webnode.com/

 

 

2.வலைப்பூக்கள் துவங்குதல்

உயர் வகுப்புகளில் இருக்கும் மாணவர்கள் ஒரு கருத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் திறனைப் பெறவும், மேம்படுத்தவும், அவர்கள் கற்றதை நினைவில் நிறுத்தவும், ஒவொருவரையும் தனித்தனியாக வலைப்பூக்கள் துவக்க ஊக்குவிக்கலாம். இது ஒரு நாட்குறிப்பு போல. இவற்றைத் துவக்குவதும் அவற்றை இயக்குவதும் எளிது. இவையும் இலவசமே

 

இணையம் மற்றும் இலத்திரன் (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் காரணமாக இன்று இதழியல் மிகப்பெரும் மாற்றங்களைக் கண்டுவிட்டது. இன்று இதழியல் துறையில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயம் interactive journalism என்பது. பல தொழில்நுட்பங்கள் செய்தி என்னும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இதழியல் இது. இதன் முக்கிய அம்சங்கள் ஐந்து 1. பெரும் தரவு (big data) 2. காட்சிப்படுத்தல் (visual storytelling) 3. சொந்தக் கதை (social) 4. கைபேசியை கவனி (mobile first) 5. திறந்த தரவு (open data) இவற்றை விவரித்தால் அது அலுப்பூட்டும் பெருங்கதையாகக் கூடும். ஆனால் நாளைய வகுப்பறைகளுக்குள் இவை அடியெடுத்து வைக்கும் என்றே என் உள் மனம் சொல்கிறது. அன்று இதழியலும் வகுப்பறையும் இரண்டறக் கலந்துவிடும்.

 

 

  

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

4 thoughts on “இதழியலும் வகுப்பறையும்

  1. pagirthalum pesuvathum anaithum thamizhaga irukka vendum.Thamizhil pesuvathai perumaiyakka vendum.thamizh maanavargalai Uookkappaduththa vendum. “Thaqmizhan yendru sollada thalai nimirnthu nillada” yella thamizh channelum, vilambara idaivelaiyil pathivu seiyyavendum. ithu koottaga nalla angila pulamaiyum, thamizh pulamaiyum konda aringhargal, ilaingargalodu sernthu nadaimuraipaduththavendum. Nandru Malan Sir.

  2. அட.. மாலன் சார் நான் இதேபோல் ஒன்று ஏவிசி கல்லூரியில் பேசக் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அங்கே போக இயலவில்லை. பெங்களூரு, ஹைதராபாத் என வசிப்பிடம் மாறியதால். தற்போது திண்ணைக்கு அனுப்பி வெளியாகி உள்ளது. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these